ஒரு காலத்தில் நடுத்தரக் குடும்பத்தினர் போக்குவரத்து தேவைகளுக்கான பைக்குகளை அதிகளவில் பயன்படுத்த தொடங்கினர். தற்போது அவர்கள் கார்களுக்கு மாறிவிட்டனர். புதிய வாகனங்கள் அல்லது பயன்படுத்தப்பட்ட வாகனங்களை வாங்குபவர்கள் அதிகரிக்க தொடங்கிவிட்டனர். கார்களை வாங்க முடியாதவர்கள், முடிந்தவரையில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு முயற்சி செய்கின்றனர். இந்தியாவில் ஓட்டுநர் உரிமத்திற்கான விண்ணப்பம் செய்பவர்களில் பெரும்பாலானோரிடம் சொந்தமாக கார் இருப்பது கிடையாது என்பதே நிதர்சனம்.
கார் வாங்கும் திறன் அதிகரிப்பு